Wednesday, September 15, 2010

அறிவிப்பு

Bollywood veggie garden சென்ற மாணவர்களுக்கு உதவி செய்த தமிழ் மன்ற மாணவர் தலைவர் ரிபாத்திற்கு நன்றி! நன்றி!

திருமதி.நாதன்

Wednesday, September 1, 2010

அறிவிப்பு

சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு வகுப்பு 1, 2 தொழில் நுட்ப மாணவர்கள் கற்றல் பயணம்(Bolly wood Veggie garden) மேற்கொள்கின்றனர்.

திருமதி.நாதன்

கட்டுரை

யுவராஜ்
1E1

இன நல்லிணக்க நாள் சிங்கப்பூரில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஏன் கொண்டாடப்படுகிறது, எதற்கு கொண்டாடப்படுகிறது. என் பள்ளியில் கொண்டாடடப்பட்ட இன நல்லிணக்க நாளைக் குறித்தும், மற்றும் என் வீட்டில் எப்படிக் கொண்டாடட்பட்டது என்பதைக் குறித்தும் நான் இந்த கட்டுரையில் எழுதப்போகிறேன்.

“மிகச் சிறிய புழுகூட மிதி பட்டவுடன் புரண்டு கொடுக்கும். புறாக்கள் தன் குஞ்சுகளை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கக் கொத்தும் .” ஒரு நாட்டில் பாதுக்காப்பு இருக்க வேண்டுமென்றால், மக்களிடையே இன நல்லிணக்கம் இருக்க வேண்டும். ஆதலால் இன நல்லிணக்கம் நாள் ஒரு முக்கியமான நாள் என்று கருதப்படுகிறது.

ஆனால், சில நாடுகளில் ,மத,ஜாதி கலவரத்தினால் அவதிப்படுகின்றனர். ஆனால், நம் நாட்டில் அமைதி இருக்கிறது. சிங்கப்பூர் குடிமக்களாகிய நாம், இனம், மொழி, மதம், ஆகிய வேற்றுமைகளை மறந்து ஒன்றுப்பட்டு வாழ்கின்றோம். இதற்குக் காரணம் இன நல்லிணக்கமே ஆகும்.

என் பள்ளி இன நல்லிணக்க நாளைக் கொண்டாடியது. அன்று உடற்பயிற்சி பாடத்தின் போது, என் ஆசிரியர் எங்களைக் ‘கபடி’ விளையாட வைத்தார். இந்த விளையாட்டு மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இன நல்லிணக்க நாள் இருந்ததால், அன்று 1 மணி நேரம் இடைவேளை இருந்தது. அன்று, சீன, மலாய், தமிழ் மற்றும் ஆங்கில உணவு விற்க பட்டது. நான் நிறைய உணவு பண்டங்களை உண்டேன். சீன உணவு மிகவும் சூடாக இருந்தது. மலாய் உணவு மிகவும் சுவையாக இருந்தது. இந்திய உணவு மிகவும் இனிப்பாக இருந்தது. ஆங்கில உணவு மிகவும் நன்றாக இருந்தது. உணவிலும் நல்லிணக்கம் இருந்தது.

பள்ளி முடிந்ததும், நான் வீட்டிற்குச் சென்றேன். என் தாயார், இந்திய உணவு பண்டங்களையும் தயாரித்தார். அன்று மாலை, நாம் இருவரும் உணவு பண்டங்களை எடுத்துக் கொண்டு பக்கது வீட்டு சீன பெண் வீட்டில் கொடுத்து இன நல்லிணக்க நாளைக் கொண்டாடினோம். நானும் என் சீன, மலாய் நண்பர்களும் பல இன கலச்சார விளையாட்டுகளை விளையாடினோம்.

“உண்மையான மனம் ஆரோக்கியமான வாழ்வின் முன்னேற்றத்திற்கு அறி குறி” என காந்தியடிகள் கூறினார். அதைப்போல் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்க்கும் இன நல்லிணக்கம் அவசியம் என்று கூறி என் கட்டுரையை முடிக்கின்றேன்.

Thursday, August 19, 2010

மாணவர்களின் படைப்பு

தலைப்பு - அண்டை வீட்டாருடன் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியம்

மணிகண்டன் - 4 வழக்கம் (2009)